Sunday, September 19, 2010

சிறுநீர்ப் பதையில் தொற்று...



சிறுநீர்ப் பாதையில் பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றுக்கான அறிகுறிகள் எளிதாகவே விளங்கிவிடும். திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.

அதுவும் அப்போதே உடனடியாகக் கழித்துவிடவேண்டும் என்கிற உணர்வு. அப்படிச் சிறுநீர் கழிக்கும்போது, சிறுநீர் இறக்குக்குழாயில் குத்துவது போன்ற வலியோ எரிச்சலோ ஏற்படும். பெரும்பாலும் சிறதளவு சிறுநீர்தான் வெளிப்படும். அப்படி வெளிப்படும் சிறுநீரில், ரத்தமும் கலந்திருக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வோடு, கீழ்வயிற்றுப் பகுதியில் ஒருவித வலியும் ஏற்படக்கூடும்.சிலர் அவர்களது வழக்கத்துகு மாறாக, பகலிலேயே ஆறுமுறைக்கு மேல் சிறுநீர் கழித்தால் அவர்களது சிறுநீர்ப் பையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை மருத்துவ ஆலோசனையின் மூலம் தெரிந்துகொள்வது நல்லது.

சிறுநீர் இறக்குக் குழாய் வழியாக பாக்டீரியா உள்ளே புகுந்து, அவை சிறுநீரகங்களையும் அடைந்தால் அப்போது காய்ச்சல், குமட்டல், முதுகுவலி, வாந்தி போன்ற அறிகுறிகளும் கூடுதலாக ஏற்படும்.சிறுநீர்ப் பாதையில் எப்படித் தொற்றுநோய்கள் உண்டாகக் கூடும்? எல்லாம் பாக்டீரியாவின் கைங்கர்யம்தான். அவை வெளியிலிருந்து நம் உடலுக்குள் செல்வதால்தான் இந்தப் பிரச்னை.பலவிதங்களில் பாக்டீரியா உள்ளே செல்லமுடியும். என்றாலும் சிறுநீர்ப்பாதை பாதிப்புகளுக்குக் காரணமாகும் பாக்டீரியா, உடலின் கீழ்ப்புறமாகத்தான் உள்ளே செல்கிறது. அதுவும் பெண்களுக்கு, அவர்களது பிறப்புறுப்பின்  வழியாக இவை உள்ளே செல்ல வாய்ப்பு உண்டு. அல்லது ஆசனவாய் வழியாகவும் உள்ளே செல்லக்கூடும். இப்படி நுழையும் பாக்டீரியா, சிறுநிர் இறக்குக்குழாயை அடைகிறது. பிறகு மேல்பக்கமாகத் தன் பயணத்தைத் தொடர்ந்து சிறுநீர்ப் பையில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. 

போகிறபோக்கில் சிறுநீர்ப் பாதையின் மீதிப் பகுதிகளையும் இந்த பாக்டீரிய 'ஆசிர்வதித்து' பாதிப்புகளை உண்டாக்கலாம்.'புயலுக்குப்பின் அமைதி, இன்பத்துக்குப் பின் துன்பம்' என்றெல்லாம் பழமொழிகளை உண்டாக்கியவர்கள், சிறுநீர்ப் பாதை குறித்தும் யோசித்திருப்பார்களா என்பது தெரியாது. ஆனால் இதற்கும் ஒரு விதத்தில் அது பொருந்துகிறது.

உடலுறவு என்ற மகிழ்வூட்டும் செயலின் போதே உடலுக்குச் சில வேண்டாத தொந்தரவுகளும் ஏற்படலாம். முக்கியமாகப் பெண்களுக்கு. சில பாக்டீரியா எப்படியோ பெண்ணுறுப்பில் வந்து தங்கிவிடும். உடலுக்குள் மேலும் நுழையவேண்டும் என்கிற தீர்மானம் அதற்கு  இருந்திருக்காது. 


ஆனால் உடலுறவின் போது ஆண் உறுப்பு அந்தப் பாக்டீரியாவை மேலும் மேலும் என்றபடி உள்ளே செல்கின்றன. பிறகு மேலே கூறிய வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.ஒழுக்கநெறி, எய்ட்ஸ் போன்ற கோணங்களில் மட்டுமல்ல, சிறுநீர்ப் பாதையில் தொந்தரவுகள் ஏற்படாமல் இருக்கவும் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆணுடன் உடலுறவு கொள்ளாதிருப்பது நல்லது. காரணம், இப்படிப்பட்ட பெண்களின் சிறுநீர்ப்பை, அதிக அளவில் தொற்றுக் கிருமிகளால் பாதிக்கப்படுகின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.நம் ஊர் பொதுக்கழிப்பறைகளைப் பற்றி நமக்குத் தெரியும். நீண்ட தூரப் பேருந்துப் பயணம் செல்பவர்கள் நடுவில் ஏதாவது நிறுத்தத்தில் வண்டி நிற்கும்போது, சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டிருந்தாலும், அதை வெளியேற்றாமல் அடக்கிக்கொள்ளத்தான் முயற்சிப்பார்கள். பொதுக் கழிப்பிடம் என்னும் நரகத்துக்குச் சில நிமிடங்கள் விசிட் செய்வதை அவர்கள் விரும்புவதில்லை.ஆண்களாவது பரவாயில்லை. எப்படியோ சமாளித்துக் கொள்வார்கள். ஆனால் பெண்களின் பாடுதான் திண்ணடாட்டம். கழிவறைக்குச் செல்லவும் பிடிக்காமல், மறைவிடம் ஓடி ஒதுங்கவும் முடியாமல் சிறுநீரை அடக்கிக் கொள்கிறார்கள்.ஆனால் இது எவ்வளவு தப்பு தெரியுமா?சிறுநீர்ப்பை என்பது ஒரு எலாஸ்டிக் தன்மை கொண்ட தசை, அதில் சிறுநீர் அதிகளவில் தங்கும்போது, அந்தத் தசை விரிகிறது. சிறுநீர் வெளியேற்றப்பட்டவுடன் அந்தத் தசை சுருங்கிவிடும்.சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்ட பிறகும் வெகுநேரம் சிறுநீர் கழிக்கவில்லை என்றால் சிறுநீர்ப்பைக்குத்தான் மிகுந்த சிரமம். எவ்வளவு நேரம்தான் பாரத்தைச் சுமப்பது? தவிர, அந்தப் பாரம் மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு. இப்படிச் சுமையால் தள்ளாடும் சிறுநீர்ப் பையின் தசை, நாளடைவில் பலவீனமடையும். அதாவது அதன் எலாஸ்டிக் தன்மை குறையும். 'அப்பாடி, வீடு வந்துவிட்டது' என்றபடி வெகுநேரம் கழித்து டாய்லெட்டிற்குள் நுழையும்போது, சிறுநீர்ப்பை தன்னிடமுள்ள மொத்தச் சிறுநீரையும் வெளியேற்றாமல் கொஞ்சம் சிறுநீரை மிச்சப்படுத்தி வைத்துக் கொள்கிறது. இதற்குக் காரணம், அதன் தளர்ந்துபோன தன்மைதான்.வீட்டுக்கு வெளியே தண்ணீர் தேங்கினால் கொசு வரும் என்பது நமக்குத் தெரியும். வீட்டுக்கு வெளியில்தான் என்றில்லை. 

எந்த இடத்திலுமே தேங்குவது என்பது வேண்டாத விளைவுகளைத்தான் கொண்டு வரும். மொத்த சேமிப்பையும் வெளியேற்றாமல் இருப்பதால், தொடர்ந்து சிறுநீர்ப்பையில் தங்கும் சிறுநீர் காரணமாகவே சிறுநீர்ப் பாதையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகமாக வாய்ப்பு உண்டு.தவிர, பெண்களுக்கென்றே இறைவன் அளித்த வரங்கள் அல்லது அவஸ்தைகள் என்று சில உண்டே! கருத்தரித்தல், மாதவிலக்கு போன்றவை. 
இவற்றின் காரணமாகவும் சிறுநீர்ப் பாதையில் பாதிப்புகள் ஏற்படலாம்.சிறுநீர்ப் பாதையில் தொற்றுக்கிருமிகள் பரவியதை எப்படிக் கண்டுபிடிப்பது? சம்பந்தப்பட்டவரிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரை, நுண்ணோக்கியில் வைத்து பரிசோதிப்பதன் மூலம் அல்லது 'கல்ச்சர்'  சோதனை மூலம் கண்டறியலாம். அதாவது பாக்டீரியா நன்கு செழித்து வளரக்கூடிய ஒரு பொருளைச் சிறுநீரில் கலப்பார்கள்.அவை வேகமாகச் செழித்து வளர்ந்தால் (இந்த நிலையில் அவற்றைக் கண்டுபிடிப்பது எளிது) பாக்டீரியா இருப்பதைக் கண்டுணர்ந்து அவையே சிறுநீரகப் பாதிப்புகளுக்குக் காரணம் என்பதையும் அறிந்து சிகிச்சை அளிப்பார்கள்.என்ன மாதிரி சிகிச்சையளிப்பார்கள் என்தையும் ஓரளவு அறிந்துகொள்வதில் தப்பில்லை. ஆன்டிபயாடிக்குகள்தான் பொதுவாக அளிக்கப்படும். சுமார் பத்து நாட்களில் இவை பாக்டீரியாவுடன் போரிட்டு அவற்றை விரட்டியடிக்கும். ஆனால் இந்தச் சமயத்தில் நோயாளி அதிகப் பிரசங்கித் தனத்தில் ஈடுபடக்கூடாது. ஒருவாரம் அல்லது 10 நாட்களுக்கென்று டாக்டர் மாத்திரை எழுதிக் கொடுத்திருப்பார். அதை உட்கொள்ளத் தொடங்கிய 2 நாட்களிலேயே குணமாகி விட்டதுபோல் நோயாளி உணர்வார்.அதாவது சிறுநீர்ப் பாதையில் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அடங்கிவிடும். முழுமையாகச் சிறுநீர் வெளியாகலாம். உடனே, எதற்காக இனிமேலும் இந்த மாத்திரைகள் என்று தானாக முடிவெடுத்து அநாவசியச் சிக்கன நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. அது பாக்டீரியா பதுங்கும் நேரம். 


மேலும் சில நாட்கள் போரிட்டு அவை இறந்தபிறகுதான், சிறுநீர்ப் பாதை முழுமையாக நலமடையும்.இப்படி நலமாக உணர்ந்த ஒருவாரத்துக்குப் பிறகு இன்னும் ஒருமுறை சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியிருக்கலாம். வேறென்ன, பாக்டீரியாக்களின் கொட்டம் முழுதும் அடங்கிவிட்டதை உறுதி செய்து கொள்ளத்தான்.எதற்கு இந்த அவஸ்தைகள் எல்லாம்? இதெல்லாம் வருவதற்கு முன்பே தடை செய்துவிடலாமே என்கிறீர்களா? சபாஷ். இது சரியான சிந்தனை.பெரும்பாலும் உடலின் கீழ்ப்பகுதியில் உள்ள துவாரங்கள் வழியாகத்தான் பாக்டீரியா உள்ளே சென்று சிறுநீர்ப் பாதையில் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்கு இப்போது தெரியும். ஆனால் அதற்காக அங்கெல்லாம் கதவுகளா போட்டுப் பூட்டமுடியும்? என்றாலும் வேறு சில நடைமுறைக்கேற்ற வழிகள் உண்டு.அதுவும் பெண்களுக்கு இது ரொம்ப முக்கியமானது. ஒன் அல்லது டூ பாத்ரூம் போனவுடன் அந்தப் பகுதிகளை நன்கு சுத்தம் செய்யுங்கள்.

அப்படிச் சுத்தம் செய்யும்போது, உங்கள் கை முன்புறத்திலிருந்து பின்புறம் மட்டுமே இயங்க வேண்டும். அதாவது மலம் மற்றும் சிறுநீரிலுள்ள பாக்டீரியா பிறப்புறப்பில் நுழைவதையோ தங்குவதையோ தவிர்க்கும் வழிமுறை இது. உடலுறவு கொள்வதற்கு முன்னும் பின்னும் பெண்ணுறுப்புப் பகுதியை நன்கு சுத்தம் செய்து கொள்வதன் மூலம் சிறுநீர்த் தொற்றுகளைக் கணிசமாகக் குறைக்க முடியும். தினமும் நிறைய குடியுங்கள். தண்ணீரைத்தான். வாஷ் பேஸினில் அழுக்குக் காணப்பட்டால் என்ன செய்வோம்? தண்ணீரை வேகமாக அங்கு பாய்ச்சுவோம். உடனே அந்த அழுக்கு அடித்துக்கொண்டு வெளியேறும் இல்லையா? அது போல தண்ணீர் உள்ளிட்ட திரவங்களை நிறைய அருந்தினால் அவை சிறுநீர்ப் பாதையில் உள்ள பாக்டீரியாவைத் தன்னுடன் இழுத்துக்கொண்டு வெளியேறும்.வைட்டமின் சி என்பது சிறுநீரின் கொஞ்சமான அமிலத் தன்மையை அதிகமாக்கும். இதன் காரணமாக உடலில் உள்ள பாதிப்பு ஏற்படுத்தும் பாக்டீரியாவின் எண்ணிக்கை குறையும். வைட்டமின் சி என்பது சிட்ரிக் அமிலம் கொண்ட எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் அதிகம் உள்ளது.பருத்தியினாலான உள்ளாடைகளை அணியுங்கள். மிகவும் இறுக்கமானதாக அது இருக்க வேண்டாம். 

அப்படி இறுக்கமாக இருந்தால் பாக்டீரியா பல்கிப் பெருகுவதற்கு அந்த ஈரப்பதம் வாய்ந்த சூழலே காரணமாக அமைந்துவிடக்கூடும்.உடலுறவுக்கு முன்னும் பின்னும் (ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்) சிறுநீர் கழிப்பது நல்லது. நுழையத் தொடங்கியிருக்கும் பாக்டீரியா இதன்மூலம் வெளியேற வாய்ப்புண்டு.உடலைச் சுத்தமாக வைத்திருங்கள். குளிக்கும்போது இடுப்புக்குக் கீழேயுள்ள பகுதிகளையும் நன்கு சுத்தம் செய்யுங்கள்.
இந்த இடத்தில் பெண்களுக்கு ஒரு கூடுதல் எச்சரிக்கை. பெண்ணுறுப்பை நீரால் நன்கு சுத்தம் செய்து கொள்வது நல்லது. 

ஆனால் சோப்பு, பெண்ணுறுப்புக்குள் சென்று விடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் சோப்பில் உள்ள ரசாயனப் பொருள்கள் அங்கு சென்று எரிச்சலை ஏற்படுத்தலாம். அது வேறுமாதிரி பிரச்னைகளுக்கு வழி வகுக்கலாம்.சில குளித்துவிட்டு வந்ததும் ஈரத்துணியோடு வெகுநேரம் இருப்பார்கள். வேண்டாமே.

நன்றி : தினகரன்

Tuesday, July 27, 2010

Don't Avoid Breakfast..........It's very important

அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். வ‌ண்டியில் போகும்போது வீசும் எதிர்காற்றிலேயே ப‌ற‌ந்துவிடுவ‌து போன்ற‌ மெலிந்த‌ தேக‌ம். த‌னுஷை விட‌ ஒல்லி!. அதிர்ந்து பேச‌மாட்டான். மிக‌ அமைதியான‌வ‌ன்.

சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால் வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. நோக்கியா, ஹுண்டாய் என‌ ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ள் ஸ்ரீபெரும்புதூரை ஆண்டுகொண்டிருந்தாலும், அவ‌ற்றிற்கு அடிப‌ணியாம‌ல் இருக்கும் ஒரு குறுநில‌ ம‌ன்ன‌ரைப் போன்ற‌வ‌ர் அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌ நெச‌வாளி. அவ‌ருக்கு உத‌வியாய் அவ‌ன‌து அம்மா. க‌ல்லூரி செல்லும் வ‌ய‌தில் ஒரு த‌ங்கை.

அவ‌னுடைய‌ த‌ந்தை என்ன‌மோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்ப‌வான்க‌ளுக்கு அடிப‌ணியாத‌வ‌ர்தான். ஆனால் அவ‌ன் ப‌ணிந்துபோக‌ த‌யாராக‌யிருந்தான். வ‌றுமைக்கோடு. எப்பாடுப‌ட்டேனும் இந்த‌ கோட்டிலிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டுவ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி.

பெரும் முய‌ற்சிக்குப் பின்ன‌ர், சென்னையில் ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில் அவ‌னுக்கு வேலை கிடைத்த‌து. மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் ரூ.6000. திருவ‌ண்ணாம‌லையில் இருந்து தின‌மும் பேருந்தில் வ‌ந்து போக‌ முடியாது. ப‌ண‌ விர‌ய‌ம் ம‌ட்டும‌ல்லாம‌ல் ப‌ய‌ண‌த்தால் ஏற்ப‌டும் உட‌ற்க‌ளைப்பும் ஒரு கார‌ண‌ம். வேறு வ‌ழியில்லை. தாம்ப‌ர‌த்தில் உள்ள‌ உற‌வின‌ர் வீட்டில் தங்கி வேலைக்கு செல்வ‌து என‌ முடிவு செய்தான்.

பிற‌ந்த‌து முத‌ல், அதிக‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ளுக்கு மேல் த‌ன் பெற்றோரை பிரிந்த‌தில்லை அவ‌ன். ப‌ணியில் சேர்ந்த‌ பின் வார‌ம் ஒரு முறைதான் வீட்டுக்குப் போக‌ முடிந்த‌து. இந்த‌ பிரிவு அவ‌னை வ‌ருத்த‌ம‌டைய‌ச் செய்தாலும், த‌ன் குடும்ப‌ம் ந‌ல்ல‌ பொருளாதார‌ நிலைமைக்கு உய‌ர‌ இது அவ‌சிய‌ம் என்று க‌ருதி த‌ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.

ப‌ண‌ம்..ப‌ண‌ம்..ப‌ண‌ம்..இது ஒன்றே முக்கிய‌ம். குடும்ப‌த்தின் வ‌றுமை ஒழிய‌ த‌ன் க‌வ‌ன‌ம் முழுதும் ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌திலேயே இருக்க‌ வேண்டும் என்ப‌து அவ‌னுடைய‌ ல‌ட்சிய‌ம், வெறி, சித்தாந்த‌ம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. காலை 6:30 ம‌ணிக்கு அவ‌னுடைய‌ ஷிஃப்ட் துவ‌ங்கும். ஆறு ம‌ணிக்கு முன்னே அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்றுவிடுவான்.

அன்று திங்க‌ள் கிழ‌மை. ப‌னி வில‌காத‌ காலை நேர‌ம். ஆறாவ‌து த‌ள‌த்தில் உள்ள‌து அலுவ‌ல‌க‌ம். த‌ரைத் த‌ள‌த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். ஆறாம் த‌ள‌ம் சென்ற‌டைந்த‌வுட‌ன் லிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே விழுந்த‌து அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்!



அங்கிருந்த‌ செக்யூரிட்டிக‌ள் அவ‌னுடைய‌ டீமுக்கு த‌க‌வ‌ல் அளித்து அவ‌னை ம‌ருத்துவ‌ம‌னைக்குக் கொண்டு செல்ல‌ ஏற்பாடு செய்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ரிசோதித்த‌ ம‌ருத்துவ‌ர் ம‌றுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ் நோ மோர்". 'டெட் ஆன் அரைவ‌ல்' என்று ரிப்போர்ட்டில் ப‌திவு செய்தார்.

பின்ன‌ர் அவ‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது தெரிய‌வ‌ந்த‌து. அவ‌னுக்கு புகை, குடி என்று எந்த‌ ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஒவ்வொரு மாத‌மும் அவ‌னுக்கென்று ரூ.1500 எடுத்துக்கொண்டு மீதி ப‌ண‌த்தை த‌ன் குடும்ப‌த்துக்கு அனுப்பிவிடுவான். அந்த‌ 1500ல் போக்குவ‌ர‌த்து, அலைபேசி, உண‌வு ஆகிய‌வ‌ற்றிற்கான‌ செல‌வுக‌ள் அட‌ங்கும். செல‌வைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌ன் மேற்கொண்ட‌ ஒரு முடிவு..தினமும் காலை உண‌வைத் த‌விர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை ம‌ட்டுமே உண்ணுவ‌து.

இந்த‌ ப‌ழ‌க்க‌ம் வெகு நாட்க‌ளாய்த் தொட‌ர்ந்து உட‌லுக்குள் வாயு உருவாகி அது இத‌ய‌த்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வ‌ய‌தில் மார‌டைப்பு! இது ஏதோ க‌ற்ப‌னையாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ரி அல்ல‌. அவ‌னுடைய‌ உண‌வு ப‌ழ‌க்க‌த்தை அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ள் கூற‌க்கேட்டு அறிந்த‌ பின் ம‌ருத்துவ‌ர் சொன்ன‌து.

ப‌ண‌ம் ஒன்றையே பிராத‌ன‌மாக‌க் க‌ருதி ப‌ர‌ப‌ர‌வென‌ ப‌ற‌ந்துகொண்டிருக்கும் இந்த‌ யுக‌த்தில், ந‌ம்மில் பெரும்பாலானோர் காலை உண‌வைத் த‌விர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும் கார‌ண‌ம்.."டைம் இல்ல‌". சாப்பிடுவ‌த‌ற்குக் கூட‌ நேர‌மில்லாம‌ல் அப்ப‌டி என்ன‌ கிழித்துவிட‌ப் போகிறோம்?

இத‌ற்கு மேல் இதைப்ப‌ற்றி நீங்க‌ளே சொல்லுங்க‌ள்!

பி.கு: நானும் இந்த‌ ம‌ட‌த்த‌ன‌மான‌ கார‌ண‌த்தைக் காட்டி ப‌ல‌ நாட்க‌ள் காலை உண‌வைத் த‌விர்த்திருக்கிறேன். அவ‌ன் ம‌ர‌ண‌ம்...என‌க்கொரு பாட‌ம். அன்றிலிருந்து என்னுடைய‌ காலை உண‌வு நேர‌ம் 10 அல்ல‌து 10:30க்குள்.

Thursday, June 17, 2010

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது : காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது : இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல் : மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் : நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று : மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.

6. தூக்கமின்மை : நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது : தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது : உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது : மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது : அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

Source : electroflowers

Wednesday, June 16, 2010

மருத்துவ கருவிகள் - CT SCAN -

மருத்துவ கருவிகள்



மருத்துவ அறிவியல் சார்ந்த தொழில் நுட்பங்கள் பலவகையில் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் அது தொடர்பான ஒரு தொடர் பதிவை பதிவு செய்யலாம் என இருக்கிறேன்,

பல மருத்துவமனைகளில், ஆராய்ச்சி மையங்களில், கண்டறி நிலையங்களில்  (SCAN சென்டர்ஸ்),  " இங்கு CT ஸ்கேன் செய்யப்படும், MRI எடுக்கப்படும், ECG எடுக்கப்படும், XRAY வசதி உண்டு, BLOOD TEST செய்யப்படும்" என பல விளம்பரங்களை காணலாம்! இவை எல்லாம் என்ன? எதற்காக? என்ன வித்தியாசம்?

இவைகளை பற்றி சிறிதளவு தெரிந்து வைத்திருந்தால் அறிவுக்காக இல்லாமல் ஆபத்து காலங்களுக்காகவாவது உதவும். என்னால் முடிந்த அளவு எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன். சிறிதேனும் உதவியாக இருந்தால் மகிழ்ச்சி.

ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ, தவறி விழுந்தாலோ தற்போது மருத்துவர்கள் பரிந்துரை செய்வது CT SCAN மற்றும் MRI . இந்த இரண்டு கருவிகளும் உடலின் அனைத்து  பாகங்களையும் ஸ்கேன் செய்து பார்க்க உதவுகிறது, இரண்டும் ஏறக்குறைய ஒரே பணியை செய்தாலும், இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் தொழில்நுட்பத்திலும் கட்டணத்திலும் உள்ளது.

CT ஸ்கேன்:

COMPUTED TOMOGRAPH என்பதின் சுருக்கமே CT  ஆகும். இதை 3 பகுதிகளாக பிரிக்கலாம். முதலாவது COMPUTER அடுத்து PATIENT TABLE பிறகு GANTRY . பலர் XRAY பிலிம் - ஐ பார்த்திருப்பீர்கள், பல படங்களிலும் சிலர் வீட்டிலும் இருக்கும் கருப்பு BACKGROUND இல் எலும்புகள் தெரியும் ஒளி ஊடுருவும் படம். இந்த XRAY பிலிம் போல் பல பில்ம்களை சேர்த்தால் கிடைக்கும் ஒரு தொடர் படங்களே CT ஸ்கேன்.

CT  ஸ்கேன்

நம் திரைப்படங்களில்  அடுத்தடுத்த frame களின் தொடர்ச்சியே படமாக வரும் அதுபோல அடுத்தடுத்த XRAY பிலிம் களின் தொடர்ச்சியே CT ஸ்கேன் படமாக வருகிறது.ஆனால் FILM களில் RECORD செய்யாமல் கம்ப்யூட்டர் இல் பதிவு செய்து எடுக்கப்படுகிறது.

முதலில் PATIENT  ஐ டேபிள் இல் படுக்க வைப்பர்.

அந்த டேபிள் இன் மேல் பாகம் GANTRY எனப்படும் பெரிய வலையத்திற்குள் பொருத்தி எந்த பாகம் ஸ்கேன் செய்ய வேண்டுமோ அந்த இடத்தை POSITION செய்வர்.

GANTRY - க்கு உள்ளே ஒரு XRAY TUBE உம் DETECTOR களும் எதிர் எதிரில் இருக்கும், ஸ்கேன் ஆரம்பித்தவுடன் இவை இரண்டும் GANTRY வளையத்தில் வேகமாய் சுற்றும்.



XRAY கதிர் வீச்சை உமிழ PATIENT இன் உடலில் ஊடுருவி  DETECTOR ஐ சேரும். DETECTOR அதை கம்ப்யூட்டர் ருக்கு அனுப்பி ஒரு தெளிவான IMAGE ஐ கொடுக்கும். 

தலை, கண், மூக்கு, மூளை - CT படம்

XRAY கதிர் எலும்புகளை ஊடுருவாது அதனால் அந்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்கள் ஊடுருவல் அடிப்படையில் வெள்ளை கருப்பாக மாறி தெரியும்.

டிப்ஸ்:
இப்போது வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தால் XRAY TUBE  சுற்றும் வேகத்தை பொறுத்து SCAN செய்யும் இடமும் மாறுகிறது. வேகமாக இயங்கும் இதயத்தை கூட ஸ்கேன் செய்ய முடியும், இதன் மூலம் ரத்த குழாய் அடைப்பையும் காணலாம். சுற்றும் வேகம் கூட கூட கட்டணமும் அதிகரிக்கும்.

எச்சரிக்கை:
கதிர்வீச்சை உபயோகிப்பதால் கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் செய்ய கூடாது, அங்கு வேலை செய்யும் TECHNICIAN கள் பாதுகாப்பு முறைகளை கையாள்வது அவசியம். சரியான அளவு உபயோகித்தால் இது மருத்துவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

கட்டி அல்லது வெட்டு - இவ்வாறுதான் தெரியும்

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தானே!

அடுத்த பதிவில், MRI பற்றியும் மற்றும் CT கும் MRI கும் உள்ள வித்தியாசத்தை பற்றியும் பார்போம்.

Monday, June 14, 2010

ஏன் நிறுத்த வேண்டும்?

நண்பர்களே,
தற்போது புகை பிடிப்பது வாலிப வயதில் ஒரு கட்டாய பழக்கமாக மாறி வருகிறது. நாளுக்கு நாள் புகை பிடிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் வருகிறது.விளையாட்டாக புகை விடுவதாக ஆரம்பிக்கும் பழக்கம் முதலில் நமக்கு அடிமையாக இருக்கிறது பின் போக போக அதற்க்கு அடிமையாக வேண்டிய நிலைமை வந்து விடும்.

பலர் இதன் விளைவு தெரிந்தாலும் புகை பழக்கத்தை விட முடியாமல் இருக்கின்றனர். சிலர் பயத்தால் விட்டு விடுகின்றனர்.புகை பிடிப்பதை அதனால் ஏற்படும் விளைவுகளை காணும் போது பயத்தால் விட்டுவிடுகின்றனர் ஆனால் சில நபர்களுக்கு காலம் கடந்து விடுகிறது.

தினமும் சில நேரங்களில் புகைப்பவர்கள் உதாரணமாக அலுவலக இடைவேளை,சாப்பிட பிறகு,டீ குடிக்கும் போது என பழகுபவர்கள் ஒரு நாள் அந்த நேரங்களில் புகை பிடிக்க முடியாவிட்டாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.எனவே ஆரம்பித்திலேயே புகை பிடிப்பதை நிறுத்துவது தான் சரியானது.

whyquit என்ற தளம் இதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.புகை பிடித்தால் என்னென்ன நோய்கள் வரும் , எப்படியெல்லாம் விளைவுகள் இருக்கும் என கூறுகிறது.மேலும் எப்படி புகை பழக்கத்தை விடுவது மேலும் நிறுத்தினால் என்னென்ன நன்மைகள் வரும் என்பதை கட்டுகிறது.

நீங்கள் புகை பிடிப்பவர்களாக இருந்தால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தளம்.உங்கள் நண்பர்கள் புகை பிடிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு காட்டுங்கள்.வலைதள சுட்டி

Tuesday, May 25, 2010

பாலியல் நோய்கள் -1

பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடு படும் போது நோய்த் தொற்றுள்ள ஒருவரிடமிருந்து நோய் இல்லாத ஒருவருக்கு தொற்றிக் கொள்ளும் நோய்களே பாலியல் தோற்று நோய்கள் எனப்படுகின்றன(sexully transmitted disease0. அதாவது பாலியல் உறவினால் தொற்றக்கூடிய நோய்கள் பாலியல் தோற்று நோய்கள் எனப்படுகின்றன.

இந்த நோய்கள் பாலியல் தொடர்புக்கு அப்பால் வேறு முறைகள் மூலமும் தொற்றிக் கொள்ளலாம்.

பாலியல் தொற்று நோய்கள் கடத்தப் படக்கூடிய முறைகள்....

தொற்று அடைந்த ஒருவருடன் பாதுகாப்பு அற்ற முறையில் உறவில் ஈடுபடுதல்
தொற்று அடைந்த ஒருவரின் குருதியை பாய்ச்சும் போது
தொற்றுள்ள ஒருவருக்கு பயன் படுத்திய ஊசியை கிருமியழிக்காது மற்றவர்கள் பாவித்தல்
பச்சை குத்துதல்
அக்குபங்க்ச்சர் முறையில் ஊசியை கிருமியழிக்காது பயன் படுத்துதல்
தாய்ப்பாலின் ஊடாக
கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு இரத்தம் மூலமாக

பொதுவான அனைத்து முறைகளையும் மேலே கூறியுள்ளேன் . எல்லா நோய்களும் எல்லா விதமாகவும் கடத்தப் படுவதில்லை.

இலங்கை ,இந்தியா போன்ற நாடுகளில் பொதுவாக காணப்படும் பாலியல் தொற்று நோய்கள்...

  1. கொனேரியா(gonorrhoea)
  2. சிபிலிசு(syphilis)
  3. பாலுறுப்பு ஹேர்பீஸ்(Genital Herpes)
  4. பாலுறுப்பு உண்ணிகள்(Genital Warts)
  5. கிளமிடியா(Clamydia)
  6. எயிட்ஸ்(Aids)
  7. ஈரல் அழற்சி B(hepatitis B)
     


எந்த விதமான செய்கைகளில் ஈடுபடுவோருக்கு இந்த நோய்கள் தொற்றுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.
,
  1. ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் துணையை

    கொண்டவர்கள்
  2. விபச்சாரத்தொடர்பில் ஈடுபடுவோர்
  3. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோர்
  4. ஊசி மூலம் போதைப் பொருளை பாவிப்பவர்கள்
  5. பாலுறுப்புக்களில் காயம் உள்ளவர்களோடு உறவில் ஈடுபடுதல்
இந்த நோய்களின் குணங்குறிகள் பெரும்பாலும் பாலுறுப்பு பிரதேசத்திலேயே ஏற்பட்டாலும், சில நோய்களின் குனக்குரிகள் வேறு விதமாகவும் , வேறு இடங்களிலும் வெளிக்காட்டப் படலாம்.

சில பேரில் இந்த நோய்கள் நீண்ட காலத்திற்கு அறிகுறிகளை வெளிக்காட்டாமல் இருந்துகொண்டு , அவர்களோடு உறவில் ஈடுபடுவோருக்கு தொற்றுக்களை ஏற்படுத்தலாம்.

பாலியல் தொற்றாக இருக்கக் கூடிய சில குணங்குறிகள்!

  1. பாலுறுப்பு பிரதேசத்தில் கொப்புளங்கள் தோன்றுதல்
  2. பாலுறுப்பு பிரதேசத்தில் காயங்கள் ஏற்படுதல்
  3. பிறப்பு வழியின் ஊடாக சீழ் வெளியேறுதல்
  4. சிறுநீர் கழிக்கும் பொது எரிவு அல்லது வலி ஏற்படுதல்
  5. உடலுறவின் போது வலி ஏற்படுதல்
  6. அடிவயிற்று நோவு
  7. பாலுறுப்பு பிரதேசத்தில் அரிப்பு(கடி) ஏற்படுதல்
  8. பாலுறுப்பு பிரதேசத்தில் உண்ணிகள் வளருதல்
  9. விதைப் பைகளில் வீக்கமும் நோவும்

மேலே உள்ள அறிகுறிகள் வெறுமனே பாலியல் சம்பந்தமான நோய்களில் மட்டும் ஏற்படுவதில்லை வேறு பல நோயகளிலும் இந்த அறிகுறிகள் ஏற்படலாம். ஆகவே மேற்சொன்ன அறிகுறிகள் ஏதாவது ஏற்பட்டால உடனேயே அது ஒரு பாலியல் நோய் என்ற முடிவுக்கு வந்துவிடவேண்டாம்.
தகுதியான வைத்திய ஆலோசனை பெற்று சரியான வைத்தியத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

மேலே சொல்லப்பட்ட பொதுவான் பாலியல் நோய்களைலே எயிட்ஸ் மற்றும் ஈரல் அழற்சி தவிர்ந்த ஏனைய அனைத்து நோய்களையும் பூரணமாக சுகமாக்குவதற்கான மருந்துகள் உள்ளதால் உங்களுக்கும் சந்தேகம் இருந்தால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெற்று உங்களை சுகமாக்கி  கொள்ளுங்கள்.

பி கு- அடுத்து வரும் இடுகைகளில் தொடர்ச்சியாக ஒவ்வொரு பாலியல் நோயாக விளக்கவிருக்கிறேன்!
            ஒவ்வொரு நோய் சம்பந்தமான படங்கள் இடுவது (பாலியல் உறுப்பின்) பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
            மறக்காமல் உங்கள் வாக்குகளை தமிழ் மனத்திலும் ,தமிளிஷிலும் அளித்துச் செல்லுங்கள்.



நன்றி : தமிழ் மருத்துவம்

பாலியல் நோய்கள் 2 (பொது இடத்தில் தவிர்க்கவும் )

பாலியல் தொற்று நோய்கள் சம்பந்தமான அடிப்படை விளக்கங்களை முந்திய இந்த இடுகையில் பார்த்தோம்.இனி ஒவ்வொரு பாலியல் தொற்று நோய்கள் பற்றியும் சற்று விளக்கமாக பார்ப்போம்.

கொனோரியா(Gonorrhea)

இது நிஸ்சோரியா கொனோரியா(Nisseria gonorrhea) எனப்படும் பாக்டீரியாவினால் ஏற்படும் நோயாகும். தொற்று ஏற்பட்டு .. தொடக்கம் .. நாட்களில் இந்த நோய் வெளிக்காட்டப்படும்.

இது ஆண் பெண் என இரு பாலாரையும் பாதித்தாலும் பிரதானமாக் குணங்குறிகளை வெளிக்காட்டுவது ஆணில் ஆகும்.


ஆண்களில் ஏற்படும் அறிகுறிகள்.

  1. ஆண் உறுப்பில் இருந்து மஞ்சள் நிறப் பாயம் வெளிவருதல்
  2. சிறுநீர் கழிக்கும் போது எரிவு அல்லது வலி ஏற்படுதல்
  3. அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டி ஏற்படுதல்









பெண்களிலே ஏற்படும் அறிகுறிகள்

பெண்களின் கருப்பைக் கழுத்துப் பகுதியே தொற்றுக்கு உள்ளாகும்.
அநேகமான பெண்களில் நோய் தோற்றி இருந்தாலும் அதன் அறிகுறிகள் வெளிக்காட்டப்படுவதில்லை.


சில பெண்களில் சில அறிகுறிகள் ஏற்படலாம். அவையாவன.

  1. பிறப்புறுப்பின் ஊடாக மஞ்சள் நிறப் பாயம் வெளிவருதல்
  2. சிறுநீர் கழிக்கும் போது எரிவு அல்லது வலி ஏற்படுதல்
  3. அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டி ஏற்படுதல்
  4. மாதவிடாய் ஒழுங்கின்றி நடைபெறுதல்
  5. அடிவயிற்றில் நோவு ஏற்படுதல்



இது தவிர வாய் வழி புணர்ச்சியில் ஈடுபடுவோருக்கு தொண்டைக் கரகரப்பும் , தொண்டையில் தோற்றும் ஏற்படும்.

குதவழிப் புணர்ச்சியில் ஈடுபடுவோருக்கு குடல் தொற்று ஏற்படலாம்.

கர்ப்ப காலத்திலேயே இந்த நோய் ஏற்படுமானால் பிறக்கின்ற குழந்தையின் கண்களிலே தொற்றுக்கள் ஏற்படலாம். இவ்வாறு கண்களிலே தொற்று ஏற்பட்ட குழன்ற்ஹைகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வை நிரந்திரமாக பாதிக்கப்படலாம்.



                       
நோயுள்ள தாய்க்கு பிறந்த குழந்தை
 

இந்த நோயினை குணப்படுத்துவதற்கான மருந்துகள் இப்போது எல்லா இடங்களிலேயும் கிடைக்கின்றன. அவை சில நாட்களுக்கே பாவிக்கப்படவும் வேண்டும்.
ஆகவே மேலே சொன்ன அறிகுறிகள் ஏதாவது ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரைச் சந்தித்து மருந்துகளைப் பெற்றுக் கொள்ளுங்க
நன்றி : தமிழ் மருத்துவம்
Related Posts with Thumbnails