Monday, June 14, 2010

ஏன் நிறுத்த வேண்டும்?

நண்பர்களே,
தற்போது புகை பிடிப்பது வாலிப வயதில் ஒரு கட்டாய பழக்கமாக மாறி வருகிறது. நாளுக்கு நாள் புகை பிடிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் வருகிறது.விளையாட்டாக புகை விடுவதாக ஆரம்பிக்கும் பழக்கம் முதலில் நமக்கு அடிமையாக இருக்கிறது பின் போக போக அதற்க்கு அடிமையாக வேண்டிய நிலைமை வந்து விடும்.

பலர் இதன் விளைவு தெரிந்தாலும் புகை பழக்கத்தை விட முடியாமல் இருக்கின்றனர். சிலர் பயத்தால் விட்டு விடுகின்றனர்.புகை பிடிப்பதை அதனால் ஏற்படும் விளைவுகளை காணும் போது பயத்தால் விட்டுவிடுகின்றனர் ஆனால் சில நபர்களுக்கு காலம் கடந்து விடுகிறது.

தினமும் சில நேரங்களில் புகைப்பவர்கள் உதாரணமாக அலுவலக இடைவேளை,சாப்பிட பிறகு,டீ குடிக்கும் போது என பழகுபவர்கள் ஒரு நாள் அந்த நேரங்களில் புகை பிடிக்க முடியாவிட்டாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.எனவே ஆரம்பித்திலேயே புகை பிடிப்பதை நிறுத்துவது தான் சரியானது.

whyquit என்ற தளம் இதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.புகை பிடித்தால் என்னென்ன நோய்கள் வரும் , எப்படியெல்லாம் விளைவுகள் இருக்கும் என கூறுகிறது.மேலும் எப்படி புகை பழக்கத்தை விடுவது மேலும் நிறுத்தினால் என்னென்ன நன்மைகள் வரும் என்பதை கட்டுகிறது.

நீங்கள் புகை பிடிப்பவர்களாக இருந்தால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தளம்.உங்கள் நண்பர்கள் புகை பிடிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு காட்டுங்கள்.வலைதள சுட்டி

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails