Thursday, June 17, 2010

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது : காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது : இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல் : மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் : நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று : மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.

6. தூக்கமின்மை : நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது : தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது : உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது : மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது : அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

Source : electroflowers

Wednesday, June 16, 2010

மருத்துவ கருவிகள் - CT SCAN -

மருத்துவ கருவிகள்



மருத்துவ அறிவியல் சார்ந்த தொழில் நுட்பங்கள் பலவகையில் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் அது தொடர்பான ஒரு தொடர் பதிவை பதிவு செய்யலாம் என இருக்கிறேன்,

பல மருத்துவமனைகளில், ஆராய்ச்சி மையங்களில், கண்டறி நிலையங்களில்  (SCAN சென்டர்ஸ்),  " இங்கு CT ஸ்கேன் செய்யப்படும், MRI எடுக்கப்படும், ECG எடுக்கப்படும், XRAY வசதி உண்டு, BLOOD TEST செய்யப்படும்" என பல விளம்பரங்களை காணலாம்! இவை எல்லாம் என்ன? எதற்காக? என்ன வித்தியாசம்?

இவைகளை பற்றி சிறிதளவு தெரிந்து வைத்திருந்தால் அறிவுக்காக இல்லாமல் ஆபத்து காலங்களுக்காகவாவது உதவும். என்னால் முடிந்த அளவு எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன். சிறிதேனும் உதவியாக இருந்தால் மகிழ்ச்சி.

ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ, தவறி விழுந்தாலோ தற்போது மருத்துவர்கள் பரிந்துரை செய்வது CT SCAN மற்றும் MRI . இந்த இரண்டு கருவிகளும் உடலின் அனைத்து  பாகங்களையும் ஸ்கேன் செய்து பார்க்க உதவுகிறது, இரண்டும் ஏறக்குறைய ஒரே பணியை செய்தாலும், இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் தொழில்நுட்பத்திலும் கட்டணத்திலும் உள்ளது.

CT ஸ்கேன்:

COMPUTED TOMOGRAPH என்பதின் சுருக்கமே CT  ஆகும். இதை 3 பகுதிகளாக பிரிக்கலாம். முதலாவது COMPUTER அடுத்து PATIENT TABLE பிறகு GANTRY . பலர் XRAY பிலிம் - ஐ பார்த்திருப்பீர்கள், பல படங்களிலும் சிலர் வீட்டிலும் இருக்கும் கருப்பு BACKGROUND இல் எலும்புகள் தெரியும் ஒளி ஊடுருவும் படம். இந்த XRAY பிலிம் போல் பல பில்ம்களை சேர்த்தால் கிடைக்கும் ஒரு தொடர் படங்களே CT ஸ்கேன்.

CT  ஸ்கேன்

நம் திரைப்படங்களில்  அடுத்தடுத்த frame களின் தொடர்ச்சியே படமாக வரும் அதுபோல அடுத்தடுத்த XRAY பிலிம் களின் தொடர்ச்சியே CT ஸ்கேன் படமாக வருகிறது.ஆனால் FILM களில் RECORD செய்யாமல் கம்ப்யூட்டர் இல் பதிவு செய்து எடுக்கப்படுகிறது.

முதலில் PATIENT  ஐ டேபிள் இல் படுக்க வைப்பர்.

அந்த டேபிள் இன் மேல் பாகம் GANTRY எனப்படும் பெரிய வலையத்திற்குள் பொருத்தி எந்த பாகம் ஸ்கேன் செய்ய வேண்டுமோ அந்த இடத்தை POSITION செய்வர்.

GANTRY - க்கு உள்ளே ஒரு XRAY TUBE உம் DETECTOR களும் எதிர் எதிரில் இருக்கும், ஸ்கேன் ஆரம்பித்தவுடன் இவை இரண்டும் GANTRY வளையத்தில் வேகமாய் சுற்றும்.



XRAY கதிர் வீச்சை உமிழ PATIENT இன் உடலில் ஊடுருவி  DETECTOR ஐ சேரும். DETECTOR அதை கம்ப்யூட்டர் ருக்கு அனுப்பி ஒரு தெளிவான IMAGE ஐ கொடுக்கும். 

தலை, கண், மூக்கு, மூளை - CT படம்

XRAY கதிர் எலும்புகளை ஊடுருவாது அதனால் அந்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்கள் ஊடுருவல் அடிப்படையில் வெள்ளை கருப்பாக மாறி தெரியும்.

டிப்ஸ்:
இப்போது வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தால் XRAY TUBE  சுற்றும் வேகத்தை பொறுத்து SCAN செய்யும் இடமும் மாறுகிறது. வேகமாக இயங்கும் இதயத்தை கூட ஸ்கேன் செய்ய முடியும், இதன் மூலம் ரத்த குழாய் அடைப்பையும் காணலாம். சுற்றும் வேகம் கூட கூட கட்டணமும் அதிகரிக்கும்.

எச்சரிக்கை:
கதிர்வீச்சை உபயோகிப்பதால் கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் செய்ய கூடாது, அங்கு வேலை செய்யும் TECHNICIAN கள் பாதுகாப்பு முறைகளை கையாள்வது அவசியம். சரியான அளவு உபயோகித்தால் இது மருத்துவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

கட்டி அல்லது வெட்டு - இவ்வாறுதான் தெரியும்

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தானே!

அடுத்த பதிவில், MRI பற்றியும் மற்றும் CT கும் MRI கும் உள்ள வித்தியாசத்தை பற்றியும் பார்போம்.

Monday, June 14, 2010

ஏன் நிறுத்த வேண்டும்?

நண்பர்களே,
தற்போது புகை பிடிப்பது வாலிப வயதில் ஒரு கட்டாய பழக்கமாக மாறி வருகிறது. நாளுக்கு நாள் புகை பிடிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் வருகிறது.விளையாட்டாக புகை விடுவதாக ஆரம்பிக்கும் பழக்கம் முதலில் நமக்கு அடிமையாக இருக்கிறது பின் போக போக அதற்க்கு அடிமையாக வேண்டிய நிலைமை வந்து விடும்.

பலர் இதன் விளைவு தெரிந்தாலும் புகை பழக்கத்தை விட முடியாமல் இருக்கின்றனர். சிலர் பயத்தால் விட்டு விடுகின்றனர்.புகை பிடிப்பதை அதனால் ஏற்படும் விளைவுகளை காணும் போது பயத்தால் விட்டுவிடுகின்றனர் ஆனால் சில நபர்களுக்கு காலம் கடந்து விடுகிறது.

தினமும் சில நேரங்களில் புகைப்பவர்கள் உதாரணமாக அலுவலக இடைவேளை,சாப்பிட பிறகு,டீ குடிக்கும் போது என பழகுபவர்கள் ஒரு நாள் அந்த நேரங்களில் புகை பிடிக்க முடியாவிட்டாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.எனவே ஆரம்பித்திலேயே புகை பிடிப்பதை நிறுத்துவது தான் சரியானது.

whyquit என்ற தளம் இதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.புகை பிடித்தால் என்னென்ன நோய்கள் வரும் , எப்படியெல்லாம் விளைவுகள் இருக்கும் என கூறுகிறது.மேலும் எப்படி புகை பழக்கத்தை விடுவது மேலும் நிறுத்தினால் என்னென்ன நன்மைகள் வரும் என்பதை கட்டுகிறது.

நீங்கள் புகை பிடிப்பவர்களாக இருந்தால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தளம்.உங்கள் நண்பர்கள் புகை பிடிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு காட்டுங்கள்.வலைதள சுட்டி
Related Posts with Thumbnails