Thursday, May 20, 2010

தினமும் மீன் எண்ணெய் மாத்திரை எடுத்துக் கொண்டால் மாரடைப்பு வராது

மீன் எண்ணெய் என்பது Omega3 Fatty Acid மருந்து வகை மாத்திரை. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து போன்ற பகுதிகளில் வாழும் மனிதர்களுக்கு மாரடைப்பு போன்ற நோய்கள் வருவது இல்லை என்ற அடிப்படையில், இம்மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்பிரதேச மக்கள் காலை, மதியம், இரவு என எல்லா நேரத்திலும் மீன் அல்லது மீன்சார்ந்த உணவையே உண்கின்றனர். எனவே இந்த பாதுகாப்பு இருப்பதாக கூறுகின்றனர்.
இந்த Omega3 என்ற மாத்திரை E P A மற்றும் D H A மருந்துகளை கொண்டது. இந்த உணவு சார்ந்த மருந்தை தினமும் உட்கொண்டால் ரத்தநாளத்தின் உட்சுவர்கள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் 'டிரைகிளிசரைட்ஸ்' என்னும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது. H D L என்ற நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் செய்கிறது. ஆனால் L D L என்ற கெட்ட கொழுப்பு அளவு குறைவதில்லை என்றும் தெரிய வந்துள்ளது. இந்த வகை மருந்துகள் ரத்தக் குழாய் நோய்களை மட்டுமின்றி, ஹார்ட் பெயிலியர், இருதய மின்னோட்ட குறைபாடுகளையும் சரிசெய்கிறது. எனவே இந்த வகை மருந்து இருதயத்திற்கு பல வகை நன்மைகளை தருவது உண்மையே

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails